எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter

கொலன்னாவையில் பள்ளிவாசல் மீது தாக்குதல்


கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவையிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அதன் அண்மையிலிருந்த வர்த்தக நிலையம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் தாக்குதல் காரணமாகப் பள்ளிவாசலுக்கும் வர்த்தக நிலையத்துக்கும் சேதமேற்பட்டுள்ளது. இது தொடர்பில் இருவர் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியோர் மது போதையில் காணப்பட்டனர் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tuesday, May 14, 2013 |
மேலும் »

மகாசேனன் புயலுக்கு பயந்து இடம்பெயர்ந்த ரோஹிங்கிய முஸ்லிம்களின் படகு கடலில் மூழ்கியுள்ளது



மேற்கு மியன்மாரிலிருந்து முஸ்லிம்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த படகொன்று கடலில் மூழ்கியுள்ளது.
இந்த வார இறுதியில் குறித்த பிரதேசத்தை தாக்கலாம் என்று எதிர்பார்க்க்படும் மகாசேனன் புயலிலிருந்து தப்புவதற்காகவே சுமார் 200 பேரை ஏற்றிய இந்தப் படகு அங்கிருந்து புறப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
ரோஹிஞ்சா முஸ்லிம்கள் பெருவாரியாக வாழ்ந்த ராக்கைன் மாநிலத்தின் போக்டோவ் நகரிலிருந்து புறப்பட்ட இந்தப்படகிலிருந்த பெரும் எண்ணிக்கையானோர் காணாமல்போயுள்ளனர்.
கடந்த ஆண்டு ராக்கைன் பிராந்தியத்தில் மூண்ட வன்முறைகளைத் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தற்காலிக முகாம்களில் வாழ்ந்துவருகின்றனர்.
புயலை முன்னிட்டு எச்சரிக்கை விடுத்திருந்த ஐநா அந்தப் பிரதேசத்திலிருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தது.
பல இடங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தாழ்நில கரையோரப் பகுதிகளில் வாழ்ந்துவருவதால் அவர்கள் பெரும் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள நேரிடுமென்றும் ஐநா கூறியிருந்தது.
புயல் தாக்கத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்று கடலில் காணாமல்போயுள்ளவர்களைத் தேடும் பணிகள் நடந்துவருவதாக அந்தப் பிராந்தியத்தில் உள்ள ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அதிகாரி தெரிவித்தார்.
முகாம் அதிகாரிகளின் அனுமதிபெற்றே இந்தப் படகு புறப்பட்டிருந்ததாகவும் பாறையொன்றில் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதுவரை ஒரு சிலர் உயிர் தப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Tuesday, May 14, 2013 |
மேலும் »

ஹக்கீம் ஆதரித்தாலும் கட்சி ஆதரிக்காது; ஹசனலி



இலங்கையில் மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை குறைக்கும் என்று கருதப்படுகின்ற 19 ஆவது சட்டத் திருத்தத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

மாகாண சபைகளுக்கு குறைந்த அளவிலேனும் அதிகாரம் வழங்கும் 13 ஆவது சட்ட திருத்தத்துக்கு மாறாக, இந்தப் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்று கூறப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்புகள் எழ ஆரம்பித்துள்ளன.

விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த 19 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு, அதிகாரப் பகிர்வு உட்பட பல விஷயங்கள் 19 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் தீர்க்கப்படும் என்று அரச தரப்பு கூறுகின்றது.
எனினும் 13 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் இல்லாது செய்யப்படும் என்று அறியப்படுகிறது.

ஹக்கீம் ஆதரித்தாலும் கட்சி ஆதரிக்காது

மாகாண சபைகளின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அல்லது இல்லாது ஆக்கும் என்கிற காரணத்தாலேயே 19 ஆவது திருத்தத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்காது என்று அதன் பொதுச் செயலர் ஹஸன் அலி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
தமது கட்சி "13 ஆவது அரசியல் திருத்தத்தில் கை வைப்பதற்கு" எந்த வகையிலும் துணை போகாது எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

தற்போது இருக்கின்ற 13 ஆவது சட்டத் திருத்தமே முழுமையான அதிகாரப் பரவலாக்கம் அல்ல என்பதே தமது கட்சியின் நிலைப்பாடாகும் எனவும் ஹஸன் அலி மேலும் தெவித்தார்.
நாட்டின் நீதித்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூஃப் ஹக்கிம் அவர்கள் 19 ஆவது திருத்தச் சட்டத்தை முன்மொழிந்தாலும் அதை தமது கட்சி எதிர்க்கும் எனவும் ஹஸன் அலி சுட்டிக்காட்டுகிறார்
Tuesday, May 14, 2013 |
மேலும் »

மகாசேனனுக்காக மன்னிப்புக் கோரிய இலங்கை - அடுத்த புயலுக்குப் பெயர் பிரியா..!



வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயலுக்கு 'மகாசேனன்' என்று சூட்டிய பெயரை இலங்கை விலக்கிக் கொண்டுள்ளது. வங்கக் கடலில் உருவான புயலுக்கு 'மகாசேனன்' என்று பெயரிடப்பட்டது. அது தற்போது திருகோணமலையில் இருந்து 650 கி.மீ தொலைவில் உள்ளது.

இது மியான்மர் - பங்களாதேஷ் நோக்கி நகர்ந்து வருகிறது. எனினும் இதன் தாக்கம் இலங்கையிலும் காணப்படுகிறது. ஆங்காங்கே சிறியளவிலான சூறாவளி வீசி வருவதுடன் இடி மின்னலும் மழையும் கொட்டி வருகிறது.

இந்த நிலையில், இந்தப் புயலுக்கு இலங்கையை ஆட்சி செய்த மகாசேன மன்னனின் பெயர் சூட்டப்பட்டமைக்கு சிங்கள தேசியவாதிகள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து மகாசேன மன்னனின் பெயரை இந்தப் புயலுக்கு வைத்தமைக்காக வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் எச்.காரியவசம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

வங்கக் கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்தப் பிராந்தியத்தில் உள்ள எட்டு நாடுகள் பெயரிடுவது வழக்கம். அகரவரிசைப்படி ஒவ்வொரு புயலுக்கும் அந்தந்த நாடுகள் அளித்த பட்டியலின் படி புயல்களுக்கு பெயரிடப்பட்டு வருகிறது.

2003இல் இளநகை இலங்கை சிபாரிசு செய்த  மகாசேன மன்னனின் பெயர், தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயலுக்கு சூட்டப்பட்டுள்ளது. அனைத்துலகக் குழுவினால் இந்தப் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தப் பெயரை நீக்கும் படி இலங்கையினால் கோரப்பட்டுள்ளது.

எல்லாக்காலங்களிலும் புகழ் பெற்ற மன்னனான மகாசேனனின் பெயரை புயலுக்குச் சூட்டியது அவமானம் என்று மூத்த பேராசிரியர் ஜே.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மகாசேன என்ற பெயரை இந்தப் புயலுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று புதுடெல்லியில் உள்ள வளிமண்டலவியல் நிலையத்திற்கு இலங்கையின்  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் இந்த முடிவுக்கு அமைச்சரின் தலையீடே காரணம் என்றும் கூறப்படுகிறது. இலங்கையின்  இந்த முடிவினால், வங்கக் கடலில் தற்போது நிலைகொண்டுள்ள புயல் பெயரை இழந்துள்ளது.

அடுத்த புயலுக்கு பிரியா என்று பெயர் சூட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, May 14, 2013 |
மேலும் »

கலாச்சாரத்தை சீரழிப்பதாக நடிகர் கமல், கௌதமி மீது பொலிசில் புகார்


இந்து மக்கள் கட்சி யின்  சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ்குமார் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்:

விஜய் டிவி சேனலில், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. கடந்த, 15,16,17, ஆகிய நாட்களில், இந்த நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசன், நடிகை கவுதமி சிறப்பு விருந்தினர்களாக, கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி தொகுப்பாளரான, நடிகர் பிரகாஷ்ராஜ், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம், உங்களுக்கு கமலை பிடிக்குமா? என, கேட்கிறார் எல்லாரும் பிடிக்கும் என்கின்றனர். ஒரு நடுத்தர வயது பெண், எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். அதற்கு பிரகாஷ்ராஜ், உங்களுக்கு, கமலிடம் நிறைவேறாத ஆசை, என்ன? என, கேட்கிறார்.


அந்த பெண், கமலை நான் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் என்கிறார். இதோ, இப்போதே உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள் என, பிரகாஷ்ராஜ் கூற, நடிகர் கமலை அந்த பெண் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து என் வாழ்வின் லட்சியம் நிறைவேறியது முத்தம் கொடுக்கும் போது, என் கணவரை வெளியே அனுப்பி விட்டேன் என்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், நடிகை கவுதமிக்கும், உங்களுக்கும் என்ன உறவு? என, பிரகாஷ் ராஜ் கேட்க நாங்கள் கணவன், மனைவி அல்ல பார்ட்னர் உடலுறவு போன்ற விஷயங்கள் உண்டு என்று கமல் கூறியுள்ளார்.

இதுதவிர, நடிகை திவ்யதர்ஷினி என்பவரும், கமலை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார். குழந்தைகள் முதல் பெரியவர் வரை, குடும்பத்துடன் பார்க்கும் பொது அறிவு நிகழ்ச்சியில், இது போன்ற அடுத்தவர் மனைவி, நடிகரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதும் நடிகர், நடிகை இருவரும், கணவன் மனைவியாக இல்லாமல், உடலுறவில் ஈடுபடுவோம் என்பதும், நம் நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சீரழிப்பதுடன், பாலியல் வன்கொடுமைகளை தூண்டுவதாக உள்ளது.

நிகழ்ச்சியை ஒளிபரப்பிய, விஜய் டிவி நிர்வாகம் நடிகர்கள் கமல், பிரகாஷ்ராஜ், நடிகை கவுதமி மற்றும் நடுத்தர வயது பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, May 14, 2013 |
மேலும் »

மகளை 'அம்மாவாக்கிய' தகப்பன்; முந்தலில் சம்பவம்


13 வயதான தனது  மகளை தந்தையொருவர் கர்ப்பமாக்கிய சம்பவமொன்று புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலையத்தில்   குறித்த சிறுமியின்  தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கு தொடுவாவ பிரதேசத்தில் வதியும் குறித்த சிறுமி கடந்த 04 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் தனியாகவிருந்த போது அவரின் தந்தையினால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளின் நடவடிக்கையில் மாற்றத்தினை உணர்ந்த  தாய், மகளிடம் அது குறித்து விசாரித்த போது  சிறுமி கர்ப்பமடைந்துள்ளதினை அறிந்துள்ளார்.

இதேவேளை, வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பில் யாருக்காவது தெரிவித்தால் கொன்று விடுவேன் என தந்தை அச்சுறுத்தியமையால் தான் இதுதொடர்பில் யாரிடமும் தெரிவிக்கவில்லை என்று சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முந்தல் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tuesday, May 14, 2013 |
மேலும் »

காத்தான்குடி மையவாடிக்காணி விவகாரம் ;13 பேருக்கு பிணை



காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆ பள்ளிவாயல் மையவாடி காணியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கலவரம் தொடர்பில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்திருந்தார்.

முறைப்பாட்டின்; பிரகாரம் 17 பேரின் பெயர்களை சந்தேக நபர்களென காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர். அதில் நான்கு பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.

அதில் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆ பள்ளிவாயல் தலைவர் உட்பட நிர்வாகிகள் 7 பேரும் மற்றும் ஏனைய ஜமாஅத்தார்கள் 6 பேருமாக 13 பேர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரினால் திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கை விசாரணை செய்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா இவர்கள் 13பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபாசரீரப் பிணையில் விடுதலை செய்ததுடன் வழக்கை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

குறிப்பிட்ட சம்பவத்தன்று மேற்படி சந்தேக நபர்கள் காத்தான்குடி நகர சபையின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினார்கள் மற்றும் கலவரத்தை தூண்டியதாகவும் குறித்த வழக்கில் அவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

கடந்த சனிக்கிழமையன்று காத்தான்குடி 6ஆம் குறிச்சி பிரதான வீதியிலுள்ள ஜாமியுழ்ழாபிரீன் மைய்யவாடிக்காணியை காத்தான்குடி நகரசபை கட்டிடமொன்று கட்டுவதற்காக வேலி போட்டு அடைத்துக் கொண்டிருந்தபோது அங்கு திரண்ட பொதுமக்கள் அவ் வேலியை உடைத்து வேலி கட்டைகளை பிடுங்கி எறிந்தனர். 

இதன்போது ஏற்பட்ட கலவரத்தில் 3பேர் காயமடைந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Tuesday, May 14, 2013 |
மேலும் »
 

Sign Up to Thuruvam Newsletter

© 2013 THURUVAM All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452